Showing posts with label மிளகு. Show all posts
Showing posts with label மிளகு. Show all posts

Wednesday, March 13, 2013

மிளகு




மிளகு நமது பாரம்பரிய உணவு. இது ஓர் இந்தியப் பொருள். அந்தக் காலத்தில் உணவுக்குக் காரம் கொடுக்க மிளகையே பயன்படுத்தினர். பின்னர்தான் மிளகாய் வந்தது. ‘பத்து மிளகு கையில் இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்’ என்பது சொல்லாடல். உணவில் உள்ள விஷத்தன்மையை முறிக்கும் பண்பு மிளகுக்கு உண்டு என்பதையே இந்த சொலவடை குறிப்பிடுகிறது.

என்ன பலன்?
மிளகு வயிற்றில் ஜீரண என்சைம்களைத் தூண்டி ஜீரணத் தன்மையை அதிகப்படுத்துகிறது.
வயிற்றில் உள்ள வாயுவை அகற்றி, உடலுக்கு உஷ்ணத்தைத் தருவதுடன், வீக்கத்தையும் குணப்படுத்தும்.
தொண்டைக் கமறல், ஜலதோஷம் குறையும்.
சுவாசக் கோளாறுகள் நீங்கும். வயிற்றுப் பொருமலும் அஜீரணமும் குணமாகும். நல்ல பசி எடுக்கும்.
தொண்டைப் புண், வறட்டு இருமல் குறையும்.
தலைவலி குணமாகும்.
அடுக்குத் தும்மல், பீனிசம், மண்டைக்குத்து, நீர்க்கோவை குணமாகும்.
மிளகு

மிளகு நமது பாரம்பரிய உணவு. இது ஓர் இந்தியப் பொருள். அந்தக் காலத்தில் உணவுக்குக் காரம் கொடுக்க மிளகையே பயன்படுத்தினர். பின்னர்தான் மிளகாய் வந்தது. ‘பத்து மிளகு கையில் இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்’ என்பது சொல்லாடல். உணவில் உள்ள விஷத்தன்மையை முறிக்கும் பண்பு மிளகுக்கு உண்டு என்பதையே இந்த சொலவடை குறிப்பிடுகிறது.

என்ன பலன்?  
மிளகு வயிற்றில் ஜீரண என்சைம்களைத் தூண்டி ஜீரணத் தன்மையை அதிகப்படுத்துகிறது.
வயிற்றில் உள்ள வாயுவை அகற்றி, உடலுக்கு உஷ்ணத்தைத் தருவதுடன், வீக்கத்தையும் குணப்படுத்தும்.
தொண்டைக் கமறல், ஜலதோஷம் குறையும்.
சுவாசக் கோளாறுகள் நீங்கும். வயிற்றுப் பொருமலும் அஜீரணமும் குணமாகும். நல்ல பசி எடுக்கும்.
தொண்டைப் புண், வறட்டு இருமல் குறையும்.
தலைவலி குணமாகும்.
அடுக்குத் தும்மல், பீனிசம், மண்டைக்குத்து, நீர்க்கோவை குணமாகும்.

Saturday, February 16, 2013

சுக்கு


சுக்கு, மிளகு, திப்பிலி, இஞ்சி, புளி, துளசி, பேரிக்காய், கேரட், நன்னாரி, சோற்றுக்கற்றாழை, சோம்பு, சுரைக்காய், பூசணிக்காய், விளாம்பழம், அமுக்கிராகிழங்கு, கரிசலாங்கண்ணி கீரை மற்றும் கீழாநல்லி இவையனைத்தும் எளிமையாக கிடைக்கும் அல்லது ஏற்கனவே வீட்டில் பயன்படுத்தும் பொருட்களாகும். இவையனைத்தும் மனிதனுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும் இயற்கையான மருத்துவ குணங்கள் கொண்டவை.

1.சுக்கு,மிளகு,திப்பிலி
இந்த மூன்றையும் இடித்து வைத்துக் கொண்டால் காய்ச்சல், இருமல், ஜலதோஷம் முதலியவற்றின் போது இவற்றைக் கஷாயமாகப் போட்டு அருந்தினால் உடனே குணம் கிடைக்கும்.மற்ற நாட்களில் சுக்கு காபி அல்லது மல்...லி காபி தினமும் ஒரு வேளை அருந்தி வரவேண்டும்.இதனால் கொலஸ்ட்ரால் பிரச்சனை தினமும் கட்டுப்படுத்தப்படும்.

2.இஞ்சி
தினமும் உணவில் இஞ்சி சேர்த்தால் உடல் வலியோ செரிமானக் கோளாறோ ஏற்படாது.வயதானவர்கள் பசியில்லை என்று சொல்ல மாட்டார்கள். குழந்தைகளும் நன்கு சாப்பிடுவார்கள்.

3.புளி
சாம்பாரிலும் இரசத்திலும் சேரும் புளியில் வைட்டமின் பி மற்றும் சி,டார்டாரிக் அமிலம்,கால்சியம் முதலியன உள்ளன. இந்த டார்டாரிக் அமிலம், அதிக மாவுப் பொருட்களால் உடல் நலம் கெடாமல் பார்த்துக் கொள்கிறது. எனவே,காய்ச்சல், ஜலதோஷம் முதலியவை தாக்கினால் மிளகு, பூண்டு,புளி சேர்த்த இரசம் தவறாமல் ஒரு டம்ளராவது அருந்துங்கள்.சாம்பார் தினமும் இடம் பெறட்டும்.

4.துளசி
துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை,ஆஸ்துமா,இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு. துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி,இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும்.ஆங்கில மருத்துவத்தில் தரப்படும் ஆன்டிபயாட்டிக்குகள் நல்லதல்ல.

5.பேரிக்காய், காரட்
இவற்றில் புற்று நோயை குணமாக்கும் போரான் என்ற உப்பு இருக்கிறது.மூட்டுகளில் வலி இருந்தால் கொஞ்ச நாளைக்காவது மூலிகை நன்கு சேர்த்து வரவும்.

6.நன்னாரி
உலர்ந்த நன்னாரி வேரை இடித்து வைத்துக் கொள்ளவும்.தினமும் 30 கிராம் அளவு வேரை தேனீராகவோ அல்லது சர்பத்தாகவோ தயாரித்து அருந்தி வந்தால் உடலுக்குச் சத்து கிடைக்கும்.இரத்தம் சுத்தமாகும்.எல்லா உறுப்புகளும் சீரகச் செயல்படும்.காய்ச்சலின் போது நன்னாரி டீ அருந்தினால் உடனே உடல் வியர்த்து காய்ச்சல் பறந்து விடும்.